தமிழ் தாய் பெற்ற தலை மகனே 
தாய் நிலம் இழந்து அஞ்சி அஞ்சி வாழ்ந்த 
தமிழனத்தை வீரத்தால் அகிலமே போற்ற 
தமிழினத்தின் விடிவெள்ளி நீ ஐயா...

தாகங்கள் துறந்த தமிழர் தலைவன் நீ ஐயா
தலைவனாய் நீ இருக்கும் வரை 
தரணியில் தமிழர் எமக்கேது தடைகள் 
.
தாய் தந்தை இழந்த பிள்ளைகளுக்கோ 
பாசமும் நேசமும் பணிவுடன் காட்டும் 
பாசத்தாய் நீயல்லவா

கொடியவனின் கொளுந்துவிட்ட கோரத்தீயை 
கோழைகள் நாங்கள் இல்லை என்று 
காரிருட்டிலும் சாவிருட்டிலும் தூக்கமின்றி 
வற்றாத நதியாகி தமிழரை கத்தவர் நீ ஐயா

தமிழால் உன்னை வாழ்த்த 
தவிக்கிறேன் தினமும் நான் 
அண்ணா உன்னை வாழ்த்த 
அலைகிறேன் அகராதியிலும் வார்த்தை தேடி

வார்த்தை தேடி என்ன லாபமையா 
வாழ்கிறீரே நீர் தமிழர் நெஞ்சங்களில் 
வைகறை விளக்காய் 
வாழ்க நீங்கள் வளர்க தமிழ்...

நன்றி
சிந்து எஸ்
Image Hosted by ImageShack.us