Most Popular

Ad Code

கரும் புலிகள்


கலங்காத நெஞ்சோடு 
கனவினை மனதில் சுமந்துகொண்டு 
கால தேவன் மடியில் 
கண் துயிலும் தியாக சுடர்களே!

அச்சம் என்பது மனத்திலின்றி 
ஆடைகளாய் வெடிகுண்டு சுமந்து
அந்நியன் கேள்விகளுக்கு 
உயிராயிதமாய் பதில் கொடுத்தவர்களே!

ஆர்பரிக்கும் அலைகடல் நடுவினிலே 
அக்கினி குழம்பாய் வெடித்து சிதறி 
அலையோடு அலையாய் 
அணைந்த வீர மறவர்களே!

தாயக நினைவினை மனதேந்தி 
தலைவனவன் வழிநின்று 
தமிழினம் காத்திடவே 
தம்முயிர் கொடுத்த சரித்திர நாயகர்களே!

சாவினை தாமறிந்தும் 
தளராது எதிரி பாசறை புகுந்து
தரைமட்டம் செய்தனரே 
பகைவன் இருப்பிடத்தினை!

அண்ணன் சொல்லே வேதமென 
மில்லர் வழி சென்று 
தம்முயிரை மெழுகாய்
உருக்கிய தனை வீரர்களே!

தமிழன் வளர்ச்சிக்கும் -எம் 
தமிழீழ விடுதலைக்கும் 
தணலோடு சேர்ந்தவர்களை 
மனம் நிறுத்தி மௌன அஞ்சலி செய்திடுவோம்....


Image Hosted by ImageShack.us

நன்றி 
கவிஞர்:வேலணையூர் சசிவா

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code