நிச்சயம் வெற்றி நிச்சயம்
தாகத் தமிழரின் தேசிய நாளில்
வேட்டொலி முழக்கு
மாவீரர் ஆலயம்
உழுதாலும் உலர்ந்தாலும்
உயிராலே தீபங்கள் ஏற்று
உலகம் வியக்கட்டும்
நிச்சயம் வெற்றி நிச்சயம்
தமிழுக்கும் மண்ணுக்கும்
தன்மான உணர்வுக்கும்
உயிர் தந்தவர் ஆலயம் எங்கே
களமாடி கனலாகி
பகை நீற்றில் குளமாடி
விதையாக வீழ்ந்தும்
தாய் நிலம் ஊன்றி
நிழல் வாழ அழைக்கிறார் உறவே
விழி நீரை துடைத்தே வாருங்கள்
விளக்கேற்றி தொழுதே நிமிருங்கள்
தூரம் அதிகம் என்று
வீரம் வீழ்ந்து செத்து
யாகம் மறந்து போதல் முறையோ
ஈழம் காணவுற்ற
தாகம் தணிந்திடாமல்
தலைமுறை பணிதல் தகுமோ
பூவான தங்கைக்கு
பூ மாலை போட்டு
போர் மாலை அணிந்துவிடு
அறிவான அண்ணாவின் சுடர் ஒளி
சிரிப்பில் இருள் காலம் கழைந்துவிடு
உருண் டோடும் உலகில்
வருந்தாத வாழ்வில்
ஈழம் ஆழ்வோமடா
ஈனம் இல்லாது கழைவோமடா.
நன்றி.
வல்வை சுஜேன்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக