தமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்!
தமிழர் நாம் இத்தரணியில்
தலை நிமிர்ந்து வாழ
தன் உயிரை துச்சமென எண்ணி
தாய் மண்ணைக் காக்க வந்த
காவிய நாயகனாய்
சரித்திரம் படைக்க
மறவர் வழியில் வந்த
மாபெரும் மாவீரனே.....
நாம் இழந்த பொருள்களும்
சிந்திய இரத்தங்களையும்
பிரிந்த உயிர்களையும்
நாளைய விடியலுக்கு
அர்ப்பணம் செய்து
சுட்டெரிக்கும் சூரியனைபோல்
கயவர்களை சுட்டெரித்து
சுடர் கொழுந்தாய்
தமிழன் தமிழனாய் வாழ
வீறு கொண்ட வேங்கையாக எழுந்து
புது அவதாரத்தோடு
எழுந்து வா வீரனே ......
உலகம் வியந்து பார்க்கும்
வரலாறு கண்ட
வரலாற்று நாயகனே
அகவை ஐம்பத்தேழுதனில்
புத்தம் புதுபொலிவோடு
புறப்படு தலைவா......
உன் வருகைக்காய்
காத்திருக்கும் தமிழினம்...
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்!
தமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்!
உலகம் உன்னால் அறிந்தது தமிழை!
பதிலளிநீக்குநீ வாழ்கின்ற காலத்தில் நானும் இருந்தேன் என்ற ஒன்றே போதும்
இப்பிறவிப் பயனை அடைந்து விட்டேன்.
உன்னை வாழ்த்தவா முடியும் என்னால்?
வணங்கி மகிழ்கிறேன் மறமகனே!
emathu uirenum melana thalaiva; ulaga thamil inatthin thalaiva; vazga ;umathu veerathirku enimeluma valarchi ullathu; neengal veeramagave mariviteergal; enpathuve -true; anbu thanbiyin vazthukkal;
பதிலளிநீக்கு