thalaivan

thalaivan

புதன், 14 டிசம்பர், 2011

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.

ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.


தமிழர் துயர் நீக்கக்கோரி தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த முதல் தமிழக போராளி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களை நினைவு கூர்ந்து தமிழீழம் அமைய போராடுவோம் என்று உறுதி ஏற்ப்போம்.

Image Hosted by ImageShack.us


0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget