thalaivan

thalaivan

திங்கள், 16 ஏப்ரல், 2012

கப்டன் பூங்குழலி ,கப்டன் ஈழவேந்தன் ஆகிய கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 18.04.1998 திருமலைக் கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இரு கடற் கரும்புலிகளின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

எங்கள் இரு மாவீரச் செல்வங்களினதும் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

கப்டன் பூங்குழலி
சாமிநாதன் சின்னமலர்
நெடுந்தீவு கிழக்கு – யாழ்ப்பாணம்
08.08.1976 – 18.04.1998

கப்டன் ஈழவேந்தன்
ஆறுமுகம் வீரசிங்கம்
சுழிபுரம் யாழ்ப்பாணம்
15.03.1978 – 18.04.1998

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget