thalaivan

thalaivan

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.

விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது.

பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டுஅம்மான், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ, கேணல் தீபன் ஆகியோர் பார்வையிடுவதையும், பொட்டுஅம்மான், தமிழ்ச்செல்வன் இருவரும் விமானத்தில் மகிழ்ச்சியோடு பயணிப்பதையும் காணலாம்.














வான்புலிகளின் முதல் உருவாக்கம் தேசியத் தலைவர் -காணொளியில்.


வான்புலிகள் பற்றிய மேலும் சில பதிவுகள்.




Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

1 கருத்து :

  1. துரோகத்தால் வீழ்ந்தோம்...ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்க பல நாடுகள் அணிவகுத்ததை எந்த வரலாற்றிலும் காணவில்லை நாம். வீழ்ந்த உயிரீக விதைகள், கடப்பாரைக்கும் நெக்குவிடாப் பாறைகளும் நெக்குவிடப் புதிதாய் முளைக்கும்...தமிழீழம் காணும்...செந்தமிழே வெல்லும்!

    பதிலளிநீக்கு

Get this widget