thalaivan

thalaivan

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

செங்கொடியின் 'தீ நாக்கில் எரிகிறது' அஹிம்சையின் பெருநெருப்பு!!


உள்ளெரிந்த நெருப்பில்
ஒரு துளி போர்த்தி வெந்தவளே,
உனை நெருப்பாக்கி சுடப் போயி
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..

மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்
தீ மையிட்டுக் கொண்டவளே,
தீ'மையில் உன் விதியெழுதி - எம்
பொய்முகத்தை உடச்சியேடி..

விடுதலை விடுதலைன்னு
வெப்பம்தெறிக்க கத்துனியா?
அதை கேட்காத காதெல்லாம்
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..

செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா
நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே,
நீ நெருப்போட புரண்டபோதே
தமிழன் வரலாறே கருகுச்சேடி...

பாரதத் தாய் அஹிம்சை நெருப்பில்
உன் உயிர்பட்டுத் துடிதுடிக்க -
உன் ஒருத்தி மரணம் போதும் போதும்
உலக கண்ணெல்லாம் ரத்தமேடி..

இப்படி கெட்ட பேரு வாங்கிவர
மரணம் தான் சொல்லுச்சாடி ?
இந்த சின்னவயசு கனவுகளை
வரலாற்றில் எரிச்சியேடி..

இனி கத்தியழ யாரிருக்கா 
இப்படி ஒன்னொன்னா போச்சுதுன்னா?
நாளை குரல்கொடுக்க யாரிருக்கா
நீயெல்லாம் எரிந்துப்போனா?

உன்னொருத்தியோட நிருத்திக்கடி
வேண்டாமே இனி ஓரிழப்பு
போராட்ட குணத்திற்கு -
தற்கொலைதான் பேரிழப்பு;

நீ விட்ட உயிரு மீட்டிடாத
கண்ணீர் - மனசின் பெருநெருப்பில் பொசுங்குதேடி
இனி மொத்த நாடும் சேருமோ இல்லையோ
சேரா தமிழ் ஒற்றுமைக்கு செங்கொடியே காவலடி!!


நன்றி:வித்யாசாகர்

Image Hosted by ImageShack.us


0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget