thalaivan

thalaivan

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன் ஆகிய இரு மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து வீரகாவியமான கடற் கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகிய இரு மாவீரர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.





தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

லெப்.கேணல் ராஜன், லெப்.கேணல் ரஞ்சன் ஆகிய இரு மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீரச்சாவடைந்த  லெப்.கேணல் ராஜன் மற்றும் லெப்.கேணல் ரஞ்சன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.



லெப்.கேணல் ராஜன் 
சோமசுந்தரம் சற்குணம் 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 
வீர்ப்பிறப்பு:11.02.1966
வீரச்சாவு :27.08.1992

புலிகளின் முதன் நிலைத் தளபதிகளுள் ஒருவரான ராஜன் இராணுவ நெருக்கடி மிகுந்த கால கட்டங்களில் திறமையாகச் செயற்பட்டு தலைவரின் பாராட்டைப் பெற்றவர்.

சக போராளிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த இவர் 27.08.1992 அன்று  யாழ் மாவட்டம் மாதகல் பகுதியில் ஸ்ரீலங்கா படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது  வீரச்சாவடைந்தார்.



லெப்.கேணல் ரஞ்சன் / மாருதியன் 
செல்லத்துரை பிராபாகரன் 
தமிழீழம் (அம்பாறை மாவட்டம்)
வீரப்பிறப்பு:13.05.1970
வீரச்சாவு :27.08.1995

27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா அதிரடி படையினருடன் ஏற்ப்பட்ட மோதலின் போது வீரச்சாவை அனைத்து கொண்டார்.




தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 25 ஆகஸ்ட், 2012

மேயர் நிலவன், கப்டன் மதன் ஆகிய இரு மாவீர்களின் நினைவு நாள் இன்றாகும்.

26.08.1993 அன்று கிளாலி கடல் நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகிய இரு மாவீரர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.




வன்னியில் (05.07.08) நடைபெற்ற நிகழ்வில் கரும்புலி மேஜர் நிலவனின் பாடல்களைக்கொண்ட "புதிய காற்று" குறுவட்டை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கேணல் ராயுவின் வீர வணக்க நாளும் வீர வரலாறும்.

கேணல் ராயு
அம்பலவாணன் நேமிநாதன்
தமிழீழம் யாழ் மாவட்டம்
தாய் மடியில் :30.05.1961
தாயக மடியில்: 25.08.2002

இன்று (25-08-2010) கேணல் ராயு அண்ணையின் நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன.
தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக் கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமான வரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டு பிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனத்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்க காலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத் தொடர்பாளனாக இருந்த போது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்து பார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.
இந்தியப் படையினருடனான போர்க் காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படு த்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போ திருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற் புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.

பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம் வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.
1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதை விட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (குசைந ஊழவெசழட) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக் கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளி டமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கிய மான பங்கினைப் பெற்றிருந்தது.
சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்து வந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒரு புறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல் வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறி வைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப் பட்டது.
……
1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப்படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.
1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார்.

நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகி விட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விட யங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.

எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக் கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிது சிறிதாக அரித்துக் கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.

அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்று வலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்த போது கூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றிய நிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.

வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வா ர்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்டராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும் கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற் கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட கேணல் ராயு படைய அறிவியல் தொழி நுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”

ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான். 

கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு. தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும், போராளிகளும் பெரும்தொகையான மக்களும் அஞ்சலி செலுத்திய கேணல் ராயுவின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட நிகழ்வை காணொளியில் காணலாம்.





தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுன் பல களங்களில் களமாடி பல போராளிகளை வளர்த்தெடுத்து வெற்றியை அள்ளி தந்த எங்கள் அண்ணன் கேணல் ராயுவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 22 ஆகஸ்ட், 2012

லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்புலி லெப்.கேணல் 
குன்றலினியன் (குகன்) 
பாலகிருஸ்ணன் துஷ்யந்தன் 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 
வீரப்பிறப்பு :08.01.1978
வீரச்சாவு :24.08.2004

24.08.2008 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணி பகுதியில்  தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) அவர்களின் வீர வணக்க நாள் இன்றாகும் (24.08.2004).


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

மேஜர் நாயகனின் வீரவணக்க நாள் இன்றாகும்.

இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன்.


தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய்யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது.

இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நிதர்சனப்பிரிவு பணிகளுக்காக படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்புக்கு  அனுப்பப்பட்டான். சிறந்த ஒரு படப்பிடிப்பாளன் அதைவிட சிறந்த ஒரு படத்தொகுப்பாளன். இவன் ஒளிவீச்சின் பல நிகழ்ச்சிகள் குறும்படங்கள் (ஒருசூடு), விவரணங்கள் என்பவற்றை தொகுத்து வந்தான். குறிப்பாக ஓயாத அலைகள் -2 விவரணத்தில் இவனது ஆற்றல் திறமை நன்கு புலப்பட்டன.

நவம் அறிவுக்கூடப் பயிற்சி முடிந்து சிறந்த ஒளிப்பதிவாளன், படத்தொகுப்பாளன் என்னும்பெயரைப் பெற்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழ்களையும் பெற்றவன் மேஜர் நாயகன். தன்னோடு இருக்கும் போராளிகளை பெரிதும் நேசிப்பவன், இவன் தலைவர் மீது வைத்திருந்த பற்று, பாசம் கணக்கிட முடியாதவை, எவ்வளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வான், கால் ஒன்றை இழந்த நிலையிலும் திறமையாக செயற்பட்ட இந்த வேங்கை 23.08.2001 அன்று கொக்குத் தொடுவாய் இராணுவ மினி முகாம் தாக்குதலை படமாக்கிவிட்டு வரும் போது எதிரியின் எறிகணை ஒன்று அவன் அருகில் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே தன் கமராவை அணைத்தபடி தாய் மண்ணை முத்தமிட்டான்.

நாயகன் வீரச்சாவு என்னும் சேதி கேட்டுத் திகைத்தோம் மனதுக்குள் அழுது விட்டு நிமிர்ந்தோம். இவன் மட்டுமா இவனைப் போல் பல படப்பிடிப்புப் போராளிகளை இந்த மண் இழந்துள்ளது. இவர்கள் வரிசையில் மேஐர் நாயகனும் இணைந்துவிட்டான், இவன் மக்கள்மீதும் மண்மீதும் தலைவர் மீதும் வைத்த பற்றை செயல் மூலம் காட்டிச் சென்றான்.

எனினும் இவன் விட்ட இந்தப் பணியை நாம் தொடர்வோம் என்று இவன் விதைகுழி மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 10]

2000 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அகதிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துவந்த இஸ்ரேலியர்களால் தமது தேசத்தின் விடுதலையை எவ்வாறு வென்றெடுக்க முடிந்தது என்று இந்தத் தொடரில் சற்று ஆழமாக ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.


இஸ்ரேலியர்களது விடுதலையின் வெற்றியில் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன என்றும் இந்த தொடரில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இந்தச் சந்தர்பத்தில் இஸ்ரேலியர்கள் தொடர்பான ஒரு முக்கிய விடயத்தை மீட்டுப் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

இஸ்ரேலியர்கள் என்றால் யார்?

அந்த இனக் குழுமத்திற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

ஏன் அவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்?

அவர்களது வரலாறு என்ன?

இஸ்ரேலியர்கள் ஏன் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றும் அவர்கள் மீண்டும் எவ்வாறு தமது தேசத்தை விடுவித்தார்கள் என்றும் நாம் பார்ப்பதானால், முதலில் இஸ்ரேலியர்கள் என்றால் யார் என்று பார்ப்பது அவசியம். அவர்களது உருவாக்கம், வரலாறு, அந்த வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள், அவர்களது வாழ்க்கைமுறை- இவைகளை அடிப்படையாகக் கொண்டுதான் தமக்கான விடுதலையை அவர்கள் வெற்றெடுத்திருந்தார்கள். அதனால் இந்த விடயங்கள் பற்றி நாம் நிச்சயம் அறிந்திருப்பது அவசியம்.

இவை பற்றித்தான் இந்த வாரம் முதல் நாம் சற்று விரிவாக ஆராய இருக்கின்றோம்.

இஸ்ரேலியர்களுடைய வரலாற்றின் பக்கங்களை உலகின் பெரும்பாண்மையான மக்கள் நம்புகின்றார்கள். ஏற்றும் கொள்கின்றார்கள்.

எவ்வாறு என்றால், இஸ்ரேலியர்களுடைய வரலாறு பற்றி கூறப்படுகின்ற விடயங்கள் கிறிஸ்வர்களின் பைபிளிலும், இஸ்லாமியர்களின் திருக்குரானிலும், யூதர்களின் வேதாகமமான தோறாவிலும் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலியர்களுடைய தோற்றம், அவர்களது வரலாறு அனைத்தும் இந்த மூன்று மதங்களின் புனித நூல்களிலும் கிட்டத்தட்ட ஒரேமாதியாகவே கூறப்பட்டுள்ளது.

அத்தோடு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் போன்றவர்களின் புனித நூல்களில் கூறப்படுகின்ற இஸ்ரேலியர்கள் தொடர்பான கதைகள் சம்பவங்களுக்கான ஆதாரங்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. எனவே பைபிள், குரான், தோரா போன்ற புனித நூல்களையும், உலக சரித்திரங்களின் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து இஸ்ரேலியர்களது தோற்றம், வரலாறு பற்றி ஓரளவு உறுதியாக எம்மால் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இஸ்ரேலியர்களுடைய உருவாக்கம்- சரித்திரம் பற்றி அறிந்துகொள்வதானால் ஆபிரகாம் என்ற மனிதனின் வாழ்க்கை பற்றி முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆபிரகாம் என்ற தனி மனிதனின் வாழ்க்கையில்தான் இஸ்ரேலியர்கள் என்ற பெயரில் இன்று உலகத்தைக் கலக்கிக்கொண்டிருக்கின்ற இனம் உருவாகியது.

இஸ்ரேலியர்களுடைய மாத்திரம் அல்ல இஸ்லாமியர்களுடையதும் கிறிஸ்தவர்களுடையதும் முற்பிதாவாக இந்த ஆபிரகாம் என்ற மனிதனே இருக்கின்றார் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

இந்த ஆபிரகாமின் வாழ்க்கையில் இருந்துதான் யூத, கிறிஸ்தவ, அரேபிய குழுமங்கள் தோன்றியிருந்தன.

எனவே இன்றைய உலகில் மிக அதிகமான மக்கள் கூட்டத்தினால் மிக முக்கியமான ஒருவராக அடையாளப்படுத்தப்படும் ஒரு மனிதர் இந்த ஆபிரகாம்.

ஆபிரகாம் என்ற இந்த மனிதன் (இஸ்லாமியர்கள் இவரை இபுராகிம்-அலை என்று அழைக்கின்றார்கள்) 'ஊர்" என்ற இடத்தில் (அதாவது மோசபடோமியாவில் யூப்ரடிஸ் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையேயான பிரதேசம்- தற்போதைய ஈராக் தேசம்) வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காணான் என்ற இடத்தில் போய் வாழ ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.

(இஸ்ரேலியர்களுடைய வரலாற்றுக்கு முன்னரே பல பெரிய இராஜியங்களும், நாகரீகங்களும் இருந்துள்ளன. இவற்றில் சுமேரியா, மெசபதோமியா, எகிப்த்து, பபிலோனியா போன்ற ராஜயங்கங்கள் குறிப்பிடத்தக்கவை.)

இயேசுக் கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் ஆபிரகாம் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆபிரகாம் வாழ்ந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் முதல் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை வரை தற்பொழுதும் இருப்பதால், ஆபிரகாம் என்ற மனிதன் ஒரு கற்பனைக் கதாபாத்திரமோ அல்லது ஒரு புராதன கடவுள் கரெக்டரோ அல்ல என்பது மாத்திரம் உண்மை.

(படம்: ஆபிரகாமின் கல்லறை)


சரி இனி இந்த ஆபிரகாமின் கதைக்கு வருவோம்.

அப்பொழுது ஆபிரகாமுக்கு 85 வயது.

முதியவர். சொத்துப்பத்து உள்ள மனிதர். ஆனால் அவருக்கு குழந்தைகள் கிடையாது. மிகவும் கடவுள் பக்தியுடன் ஒரு நேர்த்தியான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தார்.

அந்த நேரத்தில் கடவுள் ஆபிரகாமுடன் பேசினார்.

'நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நானும் ஆசீர்வதிப்பேன். உன்னைச்

சபிக்கிறவர்களை நானும் சபிப்பேன்: பூமியிலுள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்".

ஆபிரகாமுக்கு கடவுள் கூறிய வார்த்தைகள் இவைதான்.

உடனே ஆபிரகாம் தனது வீடு, தேசம், இனத்தார் அனைத்தையும் விட்டுவிட்டு, தனது குடும்பத்துடன் கடவுள் காண்பித்த காணான் தேசத்திற்குப் புறப்பட்டான்.

கடவுளுடைய கட்டளையின்படி நடந்த ஆபிரகாமுக்கு தனது வாக்குத்தத்தத்தை அடிக்கடி உறுதிப்படுத்தினார் கடவுள். அது மாத்திரமல்ல ஆபிரகாமுடன் கடவுள் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதாகவும் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய புனித நூல்கள் கூறுகின்றன.

'நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்ன வென்றால் நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

உனக்கும் உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் நான் தேவனாய் இருக்கும்படிக்கு எனக்கும் உனக்கும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாகவரும் சந்ததிக்கும் நடுவே என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையை ஸ்தாபிப்பேன்.

நீ பரதேசியாய்த் தங்கி வருகிற கானான் தேசம் முழுவதையும்; உன் பின்வரும் சந்ததிக்கு நித்திய சுதந்திரமாகக் கொடுத்து நான் அவர்களுக்கு தேவாயிருப்பேன்"

கடவுள் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்த இந்த கட்டத்தில் ஆபிரகாமுக்கு குழந்தை எதுவும் கிடையாது. வயதோ முதிர்வயது. அவரது மனைவி சாராளும் வயது முதிர்ந்த பெண். கடவுள் கட்டளைப்படி காணான் தேசம் வந்த ஆபிரகாம் கிட்டத்தட்ட ஒரு அகதி வாழ்க்கைதான் கானான் தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தான்.

இந்த நேரத்தில்தான் கானான் தேசத்தை அவனது சந்ததிக்கு நித்திய சுதந்திரமாகக் கொடுக்கப் போவதாக கடவுள் ஆதாமுடன் உடன்படிக்கை செய்கின்றார்.

அந்த காணான் தேசம்தான் இன்றைய இஸ்ரேல் தேசம்.

அந்த தேசத்தை- அகதியாக அந்த தேசத்திற்குச் சென்ற ஆபிராமின் சந்ததிற்கு நித்திய சுதந்திரமாக அவர்கள் வணங்கும் கடவுள் வழங்கியதாகவே அனைத்து யூதர்களும் கூறுகின்றார்கள்: 
சரி, விடயத்திற்கு வருவோம்.

இஸ்ரேலியர்கள் என்ற பெயர் ஆபிரகாமின் சந்ததிக்கு எவ்வாறு வந்தது? இங்கு இஸ்லாமியர்கள் எங்கே வருகின்றார்கள்? அவர்கள் ஏன் ஆபிரகாமை தமது மூற்பிதாவாகப் பார்க்கின்றார்கள்? இப்படி பல கேள்விகள் உங்களிடம் தோன்றலாம்.

அடுத்துவரும் வாரங்களில் இவை பற்றித்தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அது மாத்திரமல்ல. யூதர்களும், இஸ்லாமியர்களும் இன்று பரம வைரிகளாகவும், ஒருவரை ஒருவர் வெறுத்து மோதிக்கொண்டு இருப்பதற்குமான அடிப்படைக் காரணங்களையும் இந்தக் கதையில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ஒரு விடுதலையைப் பெறுவதில் வெற்றி பெற்ற தரப்பு என்கின்ற வகையில், அந்த விடுதலையில் முக்கிய அம்சமாக இருக்கின்ற யூதர்களுடைய உருவாக்கம், வரலாறு, வாழ்க்கை முறை- போன்றன பற்றித் தெரிந்து வைத்திருப்பது, ஒரு விடுதலையைவேண்டிப் போரடுகின்ற இனம் என்கின்ற வகையில் எமக்கு மிகவும் அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.

படம்:
ஆபிரகாமின் கல்லறை
ஆபிரகாம் பயணம் செய்ததாகக் கூறப்படும் பாதை...



அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

அக்கா தம்பி இரு போராளிகளுக்கும் இடையில் நடக்கும் (பாசம்) தவிப்பு குறும்படம்.

கடற் புலிகளின் ஆதரவுடன் தமிழீழத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இக் குறும்படம் ஒரு காலத்தில் வாழ்ந்த கரும்புலியின் உண்மை  கதை...






ஒரு காலத்தில் வாழ்ந்த கரும்புலியின் உண்மை  கதை...


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 15 ஆகஸ்ட், 2012

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் நினைவு நாள் இன்றாகும்.

கப்டன் அங்கயற்கண்ணி
புஸ்பகலா துரைசிங்கம்
தமிழீழம்(யாழ் மாவட்டம்)
(மண்கும்பான்) 
தாய் மடியில்: 10.05.1973 
தாயக மடியில்: 16.08.1994

காங்கேசன்துறை துறைமுகத்திற்குள் ஊடுருவி அங்கு தரித்து நின்ற கண்காணிப்புக் கப்பலைத் தகர்த்த முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.

“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”


அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழ வேரோடியிருக்க வேணும்.

தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும் அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும் ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம் தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.

தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும்இ 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும் நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.

கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.

ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.

லெப்.கேணல் பாமாவுக்கும் மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கையின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள் பண்புகள் எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள் நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும்இ படிச்சு முன்னுக்கு வரவேணும் என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.

‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.

‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’

என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால் இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால் தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.

கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம் நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.

எல்லாம் தயார்.

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம் என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும் அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும் தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும் தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.

இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.

என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.

1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில் காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

எல்லோருக்குமே பரபரப்பு.

தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.

ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.

‘ரைட் கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.

சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள் தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.

அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.

ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.

தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.

இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.



தமிழீழ தாயக விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த கப்டன் அங்கயற்கண்ணி அக்காவிற்கும்  மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

எங்கே எங்கள் உன்னத தலைவன் பிரபாகரன்.

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? அடுத்த கட்ட தமிழர்களின் நகர்வு என்ன?என்பதுதான் இப்போது உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது.

ஆனால் இந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடை காண முன்னால் இந்தியாவாலும் அமெரிக்காவாலும் அறிவிக்கப்பட்ட மேலும் இரண்டு ஆண்டுக்களுக்கு விடுதலை புலிகளின் மேலான தடை சட்டம் என்பதினை நாம் மிகவும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம்.

எமது விடுதலை போராட்டமானது உலக வல்லரசுகளால் ஒடுக்கப்பட்டு விடுதலை புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தி அடைந்து விட்டதாக அரசாங்கமும் எல்லா உலக நாடுகளும் அறிக்கை விட்டு கொண்டு இருக்கும் போது இன்னமும் விடுதலை புலிகளின் நிதி கட்டமைப்பு செயற்படுவதாக சொல்லி மீண்டும் பயங்கரவாத சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

இந்தியா.அதை தொடர்ந்து அமெரிக்கா. இனி வரும் காலங்களில்,தேவை ஏற்படின் ஏனைய நாடுகளும் இதை வழிமொழியலாம். இல்லை ஏற்கனவே சில நாடுகளில் இன்னமும் அமுல்படுத்தப்பட்ட சட்டம் காலாவதியாகாமல்
இருக்கலாம்.இவையெல்லாம் ஆதிக்க சிந்தனை உள்ள பேரினவாத நாடுகளின் அடிப்படை கொள்கைகள் . இவற்றை பற்றி நாம் விமர்சிப்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் எழுதலாம்.ஆகவே இதை இப்போது விட்டு விடுவோம்.

தமிழர்களாகிய நாம் விடுதலை போராட்டம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம்?
எமது நாட்டின் மீதான அக்கறையில் இன்னமும் செயற்பட்டு கொண்டு உள்ளோமா? வெறும் எழுத்துகளில் மட்டும் எழுதும் நாம் அதை எத்தனை சதவீதம் நடைமுறை படுத்துகின்றோம்?

வெளிநாடு தமிழர்களின் இன்றைய நிலை என்ன? 2008 இன் மாவீரர் உரையின் போது புலம்பெயர் இளம் தலைமுறையின் கையில் விடுதலை போராட்டமானது ஒப்படைக்கப்படுகின்றது என்று சொன்ன எங்கள் அண்ணாவின் சொல்லை நாம் எவ்வளவு தூரம் மதிக்கின்றோம். எனதருமை இளம் சமுதாயமே உங்கள் மனக்கதவை திறந்து கேளுங்கள்.

புலம்பெயர் இன்றைய தமிழர்கள் உண்மையான அர்பணிப்புடன் தம்மை ஈடுபடுத்தவில்லை என்பது நிதர்சனம். 2009 ஆண்டு வைகாசி மாதம் லண்டன் மாநகரமே அதிரும் படி ஒன்று கூடிய எம்மினிய உறவுகள் இன்று மாறியிருப்பது மிகவும் வேதனையான உண்மை. மகிந்த ராஜபக்ச குற்றவாளி என்றும் அவரது ஆட்சி குடும்பாட்சி என்றும் சொல்லிக்கொண்டு கொடி பிடிக்கும் எம்மினம் விடுமுறை வந்ததும் அந்த ஆட்சியாளர்களின் சுற்றுலா துறை வருமானத்தை அதிகரிக்க செல்லும் இடம் கொழும்பு  அதுதவிர தமது பொழுது போக்கிற்காக விடுதலை போராட்டங்களில் பங்குபற்றுவது நடந்துகொண்டு தான் இருக்கின்றது.இன்னும் தென்னிந்திய திரைப்பட குழுவினரை அழைத்து மேடை விழா நிகழ்ச்சி நடத்துவதும் ஆளாளுக்கு பணம் சம்பாதிப்பதும் என்றும் இல்லாதவாறு அதிகரித்து உள்ளது. விடுதலை இயக்கமானது பலம் பொருந்தியதாக இருந்த காலப்பகுதியில் இவ்வாறான நிகழ்வுகள் நடை பெறுவது மிகவும் அரிதானதாக ஒன்றாகவே இருந்தது. அப்படி நடைபெற்றாலும் ஈழ தமிழரின் பங்களிப்பு மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனால் இப்போது உள்ள நிலைமை எதிர்மறையாக மாற்றம் அடைந்து உள்ளது.

இதற்கான முக்கிய காரணியாக எனது அறிவுக்கு தெரிவது, ஒரு சிறந்த தன்னலம் இல்லா தலைமைத்துவம் இல்லாதது தான்.இருந்திருந்தால் இந்தியா தடைவிதிக்கும் போதே ஜனநாய ரீதியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி இருப்பார்கள்.இல்லை எமது உறவுகளில் உள்ள ஒரு சிலரின் உண்மையான நாட்டுபற்றை தெரிந்து அவர்களுடன் கை கோத்து விடுதலையை மழுங்கடிக்காமல் வளர்த்து இருப்பார்கள். இப்போது உள்ள புலம் பெயர் தமிழர்களின் மனங்களில் விடுதலை வேட்கையானது மிகவும் குறைந்து விட்டது என்பது நிஜம்.

எங்கோ ஒரு மூலையில் எந்த ஒரு நிதிபலமும் இல்லாமல் கொரில்லா முறையில் ஆரம்பிக்கப்பட்ட எமது போராட்டம் உச்சம் அடைந்து உலக நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது என்றால் அதற்கான முழுக் காரண கர்த்தாவாக இருந்தது எமது தன்னலம் இல்லா தலைமையையும் உண்மையான தேச வேட்கையும் தான்.

ஆனால் இப்போது இருக்கும் தலைமையோ, எப்போதோ எமது ஈழத்தை விட்டு வெளியேறி நிதி அடிப்படையில் பலம் பொருந்தியவர்களும், தாம் அழிந்து போகும் காலத்திலும் தமது பெயர் வரலாற்றில் எந்த ஒரு அர்பணிப்பும் செய்யாமல் இடம்பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டும் தான்.

எனவே மதிப்புக்குரிய எம்மினிய தமிழ் உறவுகளே நீங்கள் இப்போதும் விழித்து எழுந்து விடாவிட்டால் எமது இனமானது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இழந்து ,தமது இனத்தின் அடையாளத்தை தொலைத்து, நாம் வாழ்ந்ததற்கான அறிகுறிகளையே இழக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.அத்துடன்  நாற்பது ஆயிரத்திற்கு மேலான எமது போற்றுதற்குரிய மாவீரர் செல்வங்களின் கனவும் தியாகமும் வீணாகி போய்விடும். எமது ஈழத்தில் நடந்த அவலங்களிற்கு மூன்று  லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யபட்டதற்கும் உண்மையான தீர்வு கிடைக்கமால் போய்விடும்.

எமது தமிழ் மக்களே!

இறுதியாக எமது உன்னத தலைவன் யார்? என்று உங்களுக்குள் கேள்வி எழுப்புங்கள். இப்போது உள்ள இந்திய, புலம் பெயர் தமிழ் தலைவர்கள் யாரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. உண்மையான சுதந்திர தாகம் கொண்டு எம்மையும் எமது இனத்தையும் காக்க போராடும் ஒரு சிறந்த தலைவன் எங்களுக்கு வேண்டும். அவன் இப்போது எங்கோ ஒரு மூலையில் மிக அடிமட்ட நிலையில் உண்மையான சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டு இருக்கலாம்.அவனை கண்டு பிடியுங்கள்.

அது கடினம் என்றால் இப்போது தலைமையில் இருக்கும் உறவுகளே நீங்களாவது இனிமேல் உங்கள் தன்னலங்களை விட்டு விட்டு ஒன்றாக கை கோருங்கள். அப்போதாவது நாங்கள் உங்களை நம்புகின்றோம்.

நன்றி
நிலா கவி இணையம்.
www.Nilakavii.blogspot.com

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget