thalaivan

thalaivan

செவ்வாய், 8 நவம்பர், 2011

லெப்.கேணல்கள் தாரணி, வள்ளுவன், வளவன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 09.11.2001 அன்று கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வளவன் அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.



இதே நாள் 09.11.1998 அன்று முல்லைக்கடற்பரப்பில் இடம்பெற்ற படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் வள்ளுவன்(பாண்டியன்) அவர்களின்  நினைவு நாளும்,


இதே நாள் 09.11.2006 அன்று வடமராட்சிக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற் கரும்புலி  லெப்.கேணல் தாரணியின் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget